பூதப்பாண்டி, ஆகஸ்ட் 28 –
பூதப்பாண்டி பகுதியில் போலீஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தோவாளை வட்டாரத்தில் வருகிற 31ந் தேதி விநாயகர் விஜர்சனம் ஊர்வலம் நடக்கிறது. இது தொடர்பாக பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுபடி நேற்று மாலையில் மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் துவரங்காட்டிலிருந்து நன்றி குழி வரையில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு அணிவகுப்பு நடத்தினர். இதில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.



