திருப்பூர், ஆகஸ்ட் 21 –
திருப்பூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் சீரிய முயற்ச்சியாலும், ராயபுரம் எம்.ஜி.ஆர் நகர், பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் ரவுண்டானா
கோழிக்கடை சந்து, மிலிட்டரி காலனி, கொங்கணகிரி பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 57134 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி
திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ தலைமையிலும் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், தாசில்தார் கதிர்வேல் முன்னிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி மூ. நாகராஜ், பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்குமார், திருப்பூர் மாநகராட்சி கல்வி குழு தலைவர் மாமன்ற உறுப்பினர் திவாகரன், மாவட்ட துணைச் செயலாளர் டிஜிட்டல் சேகர், பகுதிச் செயலாளர் மின்னல் நாகராஜ், சலீம் பாய், கேபிள் விஜயன், மாநகர துணைச் செயலாளர் மகாலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சூர்யா, வட்டக் கழக பொறுப்பாளர்கள் பிஎஸ் பாண்டியன், தினேஷ்குமார், வார்டு துணைச் செயலாளர் சுதாகரன்,கிருஷ்ணமூர்த்தி, இளைஞர் அணி குட்டி பாய், ஜெய கிரி, ஏக் நாத் மற்றும் கமல், பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகளும் கழக நிர்வாகிகளும் பொது மக்களும் பங்கேற்றனர்.



