By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு

Last updated: June 3, 2024 4:08 pm
June 3, 2024
86 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 3 

 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெப் கேமராவுடன் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எண்ணப்படுகிறது. இதையடுத்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு அறைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒரு அறைக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குகள் தனியாக மற்றொரு அறையில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 

 

 

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகளை கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்து வாக்கு எண்ணும் அறை மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்களை பார்வையிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று கோணம் சாலையில் போக்குவரத்து நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

 

4-ந் தேதி காலையில் நாகர்கோவிலில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புன்னை நகர் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. கோணத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் நூறு மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையுடன் வரும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு முகவர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைத்துள்ளது. சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தனிஅறை தயார் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் 20 மேஜைகளிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள் மூன்று மேஜைகளிலும் எண்ணப்படுகிறது. விளவங்கோடு சட்டசபை தொகுதி வாக்கு எண்ணிக்கை மதியத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முடிவுகள் முழுமையாக தெரிய மாலை ஆகும் என்று தெரிகிறது.

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
மார்த்தாண்டத்தில் லோடுமேன்மீது தாக்குதல்
சிஆர்பிஎப் வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் 5ம் ஆண்டு விழா மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

புதுச்சேரியில் மருத்துவமனையை முதல்வர் திறந்தார்

April 17, 2025
36 Views
போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: தட்டி தூக்கிய உதவி ஆய்வாளர்: வாழ்த்திய பயணிகள்
செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account