நாகர்கோவில், ஆக. 16 –
இரவிபுதூர் அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி பக்த சேவா சங்கம் மற்றும் இரவிபுதூர் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடித் திருவிழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை இரவிபுதூர் அருள்மிகு நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் காலை மங்கள இசையும், சுதர்சன ஹோமமும், அபிஷேகம் மற்றும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் கலந்து சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சிவக்குமார், வேலப்பன், மாடசாமி, பக்தர்கள் சேவாசங்கத்தினர், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சித் தலைவி லெட்சுமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார், மருங்கூர் பேரூர் கழகச் செயலாளர் சீனிவாசன், இரவிபுதூர் ஊராட்சி பொறுப்பாளர் செல்லம்பிள்ளை, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதிகுமார் (எ) கண்ணன், இணைச் செயலாளர் சாய்சரவணன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றய தலைவர் வீரராஜா, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் வெங்கடேஷ், இரவிபுதூர் ஊராட்சி கிளைச் செயலாளர் சுப்பிரமணியபிள்ளை, அழகப்பன், கணேஷ் (எ) அழகப்பன், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



