தஞ்சாவூர், ஆகஸ்ட் 15 –
தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து 32 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூபாய் 75,000 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு நிதி உதவி ரூபாய் 27,000 மதிப்பிலும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 20,35,431 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ. 6,28,176 மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி நேரடி கடன் 16 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.133,00,000 கடனுதவியும், தொழில் வணிகத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 40,05,800 நிதி உதவியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழக அரசின் பசுமை விருது மற்றும் ரூபய் 1 இலட்சம் நிதி 3 பயனாளிக்கு ரூ 300,000 மதிப்பிலும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 3 இலட்சத்து 71 ஆயிரத்து 407 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களையும், கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை மகளிர் மேல்நிலைப் பள்ளி, மனோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளி, ஒரத்தநாடு செந்தமிழ் மெட்ரிக் பள்ளி தஞ்சாவூர் வீரராகவ அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் அரசர் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, திருவையாறு சீனிவாச ராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர் மேம்பாலம் இந்திய குழந்தைகள் நல இல்லம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 382க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவியருக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கார்த்திக் ராஜா, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



