மதுரை, ஆகஸ்ட் 13 –
மதுரை கோ.புதூர் சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவிகள் அஞ்சனா மற்றும் அனுஷ்கா ஜெனிபர் ஆகியோர் கடந்த 07.08.2025 அன்று இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதன்மூலம் மகளிர் இரட்டையர் பிரிவில் அஞ்சனா அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
இது சி.இ.ஓ.ஏ. பள்ளிக்கு மட்டும் அல்லாது மதுரை மாவட்டதிற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று சி.இ.ஓ.ஏ. கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் முனைவர்
மை. ராசா கிளைமாக்சு வெகுவாக பாராட்டினார். அதனைத் தொடர்ந்து சாதனை படைத்த மாணவிகளை தலைவர் சாமி மற்றும் முதன்மை முதல்வர் செல்வி. கலா, முதல்வர் மஞ்சுளா ஆகியோர் உட்பட ஆசிரியர்களும் பாராட்டினர்.



