கோவை, ஜூலை 25 –
கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே அடிசியா நிறுவனத்தின் சார்பாக ஒன் வேர்ல்டு மனை பிரிவுகள் விற்பனையை நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார். அனைத்து வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ள ஒன் வேர்ல்டு வீட்டுமனை விற்பனையை அடிசியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்வதாக குறிப்பிட்ட அவர் வீட்டுமனைகள் உருவாக்கத்தில் கோவை மாநகரின் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டான அடிசியா கோவையில் தனது புதிய மனை பிரிவு விற்பனை திட்டங்களை துவக்கி வருவதாக தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக காளப்பட்டி அருகே துவங்கப்பட்டுள்ள ஒன் வேர்ல்டு மனை பிரிவுகளில் மனை வாங்குபவர்களுக்கு சாலைகள், மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வழிபாட்டு தளங்களாக சர்ச், மசூதி மற்றும் கோவில் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக இந்திய இராணுவத்தில் பணி புரிபவர்களுக்கு 5 சதவீத சிறப்பு சலுகை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றத்தை வழிநடத்தும் பிராண்டாக அடிசியா தொடர்ந்து பயணிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.