நாகர்கோவில், ஜூன் 26 –
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த இளம் சிறார் ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது பத்தாம் வகுப்பு படித்து வந்த நண்பரின் தங்கைக்கும் இளம் சிறாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணவியை தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளம் சிறார் வலுக்கட்டாயமாக அவரிடம் ஆசை வார்த்தை கூறி பலத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி, இது தொடர்பாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட இளம் சிறாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 23 அன்று தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். சம்பவம் நடந்த 2018ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட இளம் சிறாருக்கு வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.