தஞ்சாவூர், ஜூன் 24 –
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசாணை எண் 354 மறுவரையறை செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலை மருத்துவர்களுக்கு படித்தொகை ரூபாய் 3 ஆயிரத்தை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை 4 (டி) மூலம் நீக்கப்பட்ட 1500 பேருக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரி பதிவுகளை மீண்டும் கொண்டுவர வேண்டும். நோயாளிகளின்எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை முதல்வர் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமூக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் சார்பில் அகிலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம், செயலாளர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.