கோவை, ஜூன் 23 –
கோவை மாவட்டம் ஒலம்பஸ் நடராஜா வாசகசாலை ராமநாதபுரத்தில் தமிழ்நாடு இலக்கியப் பேரவையின் சார்பாக கவிஞர் பொன்சிங் அவர்களின் உள்ளத்தின் கதவுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை திராவிட மணி, தலைமை பொன்முடி சுப்பையன், நூல் வெளியிட்டவர் அரோமா ஆர் பொன்னுசாமி, நிர்வாக இயக்குனர் மகாலட்சுமி டைய்ரி, டாக்டர் அரிமா முத்து ஆர் பழனிச்சாமி, முத்து ஃபயர் எக்யூப்மெண்ட்ஸ் அவர்கள் முதல் படியை பெற்றுக் கொண்டார். கவிதாயினி மீ உமா மகேஸ்வரி, பட்டிமன்ற பேச்சாளர் ஆயுள் காப்பீட்டு கழகம் கோவை நூல் மதிப்பீடு செய்து சிறப்புரையாற்றினார். கவிஞர் பொன்சிங் நூல் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார். புலவர் சி. சோதிநாதன் நன்றி உரை ஆற்றினார். இவ்விழாவிற்கு புலவர்கள், தமிழ் அறிஞர்கள், வாசகர்கள், இலக்கிய வட்டத்தைச் சார்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கவிஞர் பொன் சிங் (பொன் சிங்காரம்) அவர்கள் பாரத ஸ்டேட் வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், சிறுகதை, கட்டுரைகள், எழுதுபவர். இவரது படைப்புகள் உண்மை உறங்கும் நேரம், உறவும் பிரிவும், உன்னதங்களில் ஓசன்னா, உள்ளத்தின் கதவுகள் ஆகியவை வாசகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இவரது நாவல் உறவும் பிரிவும் சிறந்த நாவலாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் குறிஞ்சி இலக்கிய மன்றம் தேர்வு செய்து சிறந்த கதைக்கான பரிசுகள் மற்றும் கேடயங்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், சமூக சேவகர். இலக்கியப் பணியும் சமூக பணியும் இரண்டு கண்களாக பாவித்து வருகிறார். இவருக்கு தினத்தமிழ் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இவரது பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.