தருமபுரி, ஜூன் 21 –
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் அரசாங்கம் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்பிக்கள் செந்தில், பாரி மோகன், வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுப்பாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள் செல்வகுமார், பாடி செல்வராஜ், சாந்தமூர்த்தி, சண்முகம், பெரியசாமி, பசுமைத்தாயகம் மாது, வணங்காமுடி மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி ஏரி, குளங்களில் நீரை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் தண்ணீர் இணைப்புடன் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.