தருமபுரி, மே 29 –
தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சியில் சிப்காட் வளாகத்தில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி சிப்காட் அமைய உள்ள இந்த பகுதியில் சுமார் 100 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. 30 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இனைப்பு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 1,230 ஏக்கர் தரிசு நிலம், 500 ஏக்கர் பட்டா நிலம் விவசாயம் செய்யப்படாத நிலம் என்றார்.
தருமபுரி சிப்காட்டில் நல்ல தொழிற்சாலைகள் வந்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட சிப்காட்டுக்காக எடுக்க கூடாது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பகுதியிலும் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தது பாமக என நினைவு கூர்ந்தார். தற்போது முதல் கட்டமாக 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாலை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீருக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நான்கு கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மின்சார வசதிக்காக 17 ஏக்கர் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத வகையில் சிப்காட் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.
சிப்காட் அமைய உள்ள இந்த பகுதி மேடு பள்ளமான இடம் தொழிற்சாலைகள் அமைக்க நிலத்தை சமன்படுத்த நிறைய செலவாகிறது. அதிக முதலீடு தேவைப்படுகிறது மண் சமன் செய்து சிப்காட் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். தற்பொழுது 9 தொழிற்சாலைகள் வர உள்ளதாக தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கக்கூடிய தொழிற்சாலையாக அமைய வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.



