மதுரை, ஜூன் 21 –
சுந்தரம் பைனான்ஸ் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் முழுமையான நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று இந்தியாவின் பெரிதும் மதிக்கப்படும் நிதி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சுந்தரம் வெல்த் என்ற பெயரிலான தனது சேவையை ஒரு பிரத்யேக சொத்து மேலாண்மைச் சேவையாக விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை இந்தியாவில் மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (UHNI), உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் (HNI) மற்றும் வசதி படைத்த குடும்பங்களின் அதிநவீன நிதித் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் இடத்தில் இந்த நிதி நிறுவனத்தை நிலைநிறுத்தும். மேலும் விரிவுபடுத்தப்பட்ட சேவை, சொத்து மேலாண்மையில் இந்நிறுவனம் ஏற்கனவே கொண்டிருக்கிற திறன்களையும் நிபுணத்துவத்தையும் வலுவாக்கும். இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட திறன்கள் வழியாக வழங்கப்படும் விரிவான நிதி தீர்வுகளில் முக்கிய நிதித் திட்டமிடல், போர்ட்ஃபோலியோ ஒதுக்கீடு மற்றும் இடர்வாய்ப்பு மேலாண்மை ஆகியவை உள்ளடங்கும் சந்தையின் வசதி படைத்த பிரிவுகள் மீது சிறப்பு கவனம். சுந்தரம் வெல்த் சேவை, பாரம்பரிய முதலீட்டு திட்டங்களுக்கும் அப்பாற்பட்ட அதிநவீன செல்வ மேலாண்மை தீர்வுகள் தேவைப்படும் செல்வந்தக் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை முதன்மை இலக்காக கொண்டிருக்கும். சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் கொண்டிருக்கும் நீண்டகால வாடிக்கையாளர் உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இச்சேவை குறிப்பிடத்தக்க செல்வத்தை உருவாக்கிய செல்வந்தர்களுக்கும் மற்றும் அந்த இலக்கை நோக்கி கவனமாகவும் சீராகவும் செல்வத்தை தற்போது உருவாக்கி வருபவர்களுக்கும் சேவையாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இருக்கும் என்று நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.