கோவை, ஜூன் 21 –
கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் டாக்டர் முத்து சரவணக்குமாரின் முத்துஸ் மருத்துவமனை கிளையின் துவக்க விழா நடைபெற்றது. கோவை உக்கடம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரை உள்ள சாலையில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றது. அப்பகுதியில் விபத்துகளால் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டும் பாதிக்கப்பட்டவர்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக நகரத்துக்குள் செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதின் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புறநகர் பகுதியான மலுமிச்சம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய முதலுதவி முத்துஸ் மருத்துவமனை துவக்கப்பட்டது. துவக்க விழாவில் கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் அரிமா ஆளுநர், துணை ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள், நிர்வாகிகள் என திரளான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையை துவக்கி வைத்தனர். மருத்துவமனை மருத்துவர் முத்து சரவணகுமார் செய்தியாளர்கள் மத்தியில் விபத்தின் காரணமாக ரத்த இழப்பு அதிகமாக ஏற்படுவதால் ரத்த இழப்பை தடுத்திடவும் மூளையின் செயல்பாட்டை செயலிழக்காமல் பாதுகாக்கவும் கை கால் முறிவு அதிகமாகாமல் பாரபட்சமின்றி உடனடி மருத்துவ சேவையை கொடுத்து அவர்களின் பாதிப்பை தடுக்கின்ற பொருட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று இம்மருத்துவமனை துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நேரம் அதற்குண்டான செலவுகள் அதிக அளவு சேமிக்கப்படும். அதுமட்டுமன்றி பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் உடனடியாக மருத்துவ சேவையை துவக்குவதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்கவும் உயிர் இழப்பைத் தடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.