ஈரோடு ஜூன் 5
ஈரோடு மாநகர மாவட்ட த மா கா தலைவர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் வறட்சிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் காரணமான சீமை கருவேல் மரங்களை அழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஆனால் அரசு சீமை கருவேல் மரங்களை முறையாக அழிக்கவில்லை . இந்த சீமை கருவேல் மரம் மற்ற மரங்களை விட அதிக அளவு நீரை உறிஞ்சுகிறது , காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றின் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது . இத்தாவரத்தில் மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன் டையாக்சைடை வெளியிடுகிறது அதனால் காற்று மாசுபடுகிறது .ஆகவே மண்ணிற்கும் மனித குலத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அழிக்க அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics