வேலூர்=03
வேலூர் மாவட்டம் ,காட்பாடி தாராபடவேட்டில் நடைபெற்ற கெங்கை அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் கெங்கை அம்மன் சிரசு ஊர்வலமும் கண் திறப்பு நிகழ்ச்சியும் சிரசு ஏற்றுதலும் மாலை வான வேடிக்கைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் மற்றும் மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா ஆகியோர் திருவிழாவில் கலந்து கொண்டு கெங்கை அம்மனை வழிபட்டனர்.