புதுக்கோட்டை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2025-26 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, இந்நிகழ்வினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி, இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் கலந்து கொண்டு, மாணாக்கர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை வழங்கினார். உடன், மேயர் திலகவதி செந்தில் சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா துணை மேயர் எம்.லியாகத் அலி மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
திருவல்லிக்கேணி, லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி

Leave a comment