விராலிமலை ஏப்ரல் 12
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்று வரும் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்து அதனை அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து நத்தம் புறம்போக்கு இடமாக மாற்றம் செய்து அதனை தனியொருவருக்கு அரசு பட்டா வழங்கியதை கண்டித்து சமூக ஆர்வலர் ஒருவர் செல் டவர் மேல் ஏறி நின்று பட்டாவை ரத்து செய்ய கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் சுமூக பேச்சுவார்த்ததைக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டார் இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.



