தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு / அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்களை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும், இன்றைய தினம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் 1022 அரசு/ அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மற்றும் கல்வி உபகரணங்களை பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிகள் மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் அனைவரும் அரசின் அனைத்து திட்டங்கள் மூலம் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டறிந்து நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்



