சென்னை ஜூன் 03
சென்னை, பெருங்களத்தூர், பீக்கங்கரணை, காந்தி ரோடு, காமராஜர் நகரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது, மதுபான கடை டாஸ்மார்க் எண் 4122 என்ற எண்ணில் கடை இயங்கி வருகிறது, கடை அருகாமையில் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது, மேலும் எம்ஜிஆர் நகர், சாரதா நகர் போன்ற நகர்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த மதுபான கடை சாலை மெயின் ரோட்டில் உள்ளது, சாலையில் குடித்துவிட்டு குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும் பள்ளி மாணவர்களிடையே தொந்தரவு ஏற்படுத்துவதாகவும் கடும் கோபத்திலும் வேதனையில் உள்ளனர், இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தற்போதைய ஆட்சி சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இக்கடை அமைந்துள்ளது, தற்போதைய ஆட்சி நடவடிக்கை எடுக்குமா ? அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கணும் ?பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



