சங்கரன்கோயில், செப். 19 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் கழிவு சேகரிப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவு சேகரிப்பு மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், ஆர் டி ஓ கவிதா, நகராட்சி கமிஷனர் சாம்கிங்ஸ்டன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், பொறியாளர் இர்வின் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலுவலகத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மைக்கான தூய்மை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாணவரணி வெங்கடேஷ், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, ஜெயக்குமார், பாலாஜி மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், டெங்கு பணி பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



