வண்டலூர், அக். 04 –
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துல் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைகழகத்தில் கிரசண்ட் பாலிமர் இன்ஜினியரிங் துறை சார்பில் தேசிய அளவிலான POLYINNOFEST 2025 என்ற தலைப்பில் கண்காட்சி நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் துறை வல்லுநர் ஷ்ரீமுகுந்து மாதவ் டைரக்டர், ஒருங்கிணைந்த செயலாக்கம் மற்றும் விநியோக சங்கிலி (Director, Integrated Operations and Supply Chain), Ascend Performance Materials, சென்னை கலந்து கொண்டு பாலிமர் துறையின் வளர்ச்சி குறித்தும், பாலிமர் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலிமர் மற்றும் பிளாஸ்டிக் துறை வல்லுநர் ஷ்ரீமுகுந்து மாதவ் கூறுகையில், இன்று எந்த பொருட்களை எடுத்தாலும் பிளாஸ்டிக், பாலிமர் இல்லாத பொருட்களை காணமுடியாது. எந்த பொருட்களை தயாரிக்க வேண்டும் என்றாலும் பாலிமர் தேவை எனவே எதிர்காலத்தில் பாலிமர் துறைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மேலும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலமும் அபார வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக டீன் டாக்டர் ஹெச். சித்தி ஜெய்லானி, இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ்.எம். அப்துல் மஜீத் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் எஸ். ஷம்ஷாத் பேகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜே.டாஃபினி, மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பசந்தா குமார் பெஹரா மற்றும் டாக்டர் ஹிரான் மயூக் லால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



