திருப்பத்தூர்:ஜூன்:01, திருப்பத்தூரில் தேமுதிக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதிலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் மாவட்டம் வாரியாக தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மாவட்ட துணை செயலாளர் சி.எஸ்.சரவணனுக்கு கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து, கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலும் இக்கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைத்தல், பிஎல் 2 படிவம் அமைத்தல், அணி நிர்வாகிகள் பதவி நியமனம் சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை முன்னெடுத்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்நிகழ்ச்சியானது மாவட்ட துணை செயலாளர், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி செல்வன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கழக செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட கழக பொருளாளர் ஆஞ்சி, மாவட்ட கழக துணை செயலாளர் பயாஸ் பாஷா, தலைமைக் கழக பொதுக்குழு உறுப்பினர் குணபாலன ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில்
கந்திலி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜா, கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் திருப்பதி, மாவட்ட பிரதிநிதிகள் மேகநாதன், பழனி, தீர்த்தமலை, ரமேஷ்,சரஸ்வதி, சிங்காரவேலன், கந்திலி ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், நகரக் கழகத் துணைச் செயலாளர் வினோத்குமார், நகரக் கழக மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார் , தினேஷ் ,அப்ரோஸ், அல்ல பகத்,
கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜமால், வடக்கு ஒன்றிய செயலாளர் யோகநாத், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் மதன்ராஜ், நகர அவைத் தலைவர் டி.என்.அன்பு, கந்திலி கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுதாகர், தெற்கு ஒன்றிய பொருளாளர் மாது, வடக்கு ஒன்றிய பொருளாளர் மோகன், திருப்பத்தூர் நகர கழக பொருளாளர் அக்பர் பாஷா என பலரும் கலந்து கொண்டனர்.