ராமநாதபுரம், மே 29-
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா அலுவலகத்தில் 4 ஆம் நாள் ஜமாபந்தி நடந்தது. கடலாடி உள்வட்டம்
மீனங்குடி, கடலாடி, கடுகு சந்தை, பெரியகுளம், மாரியூர்
கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்வியிடம்
கோரிக்கை மனு அளித்தனர். அடங்கல், பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், முதியோர் ஓய்வூதியர் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. மே 23 ல் நடந்த ஜமாபந்தி முகாமில் கோரிக்கை மனு அளித்த 4 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. தாசில்தார் முருகேஷ், தனி வட்டாட்சியர் செண்பகலதா, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்துராமலிங்கம், மண்டல துணை தாசில்தார் ரேணுகா தேவி, வருவாய் ஆய்வாளர் வினோத் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்து ஹரிதா (மீனங்குடி), முனியராஜா (கடலாடி), ராஜேஷ் கண்ணா (கடுகு சந்தை), குமரன் (பெரியகுளம், மாரியூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.