மார்த்தாண்டம் மே 27
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் ஆலன் திலக் ஷிட்டோ ரியூ கராத்தே பள்ளியின் சார்பில் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான மாணவ மாணவியரின் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நித்திரவிளை சந்திப்பில் இருந்து துவங்கி காஞ்சாம்புரம்,தெருவுமுக்கு சென்று மீண்டும் காஞ்சாம்புரம் பெட்ரோல் பம் இன் எதிர்ப்புறம் உள்ள கராத்தே பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.100 ற்கு மேற்பட்ட மாணவ மாணவியர் விழிப்புணர்வு பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டார்கள். மாபெரும் விழிப்புணர்வு பேரணியை நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரசல் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து கராத்தே பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியருக்கு பட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்சாய் ராஜு தலைமை தாங்கினார். மாஸ்டர் லதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஜெயராஜ் அனிதா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். சென்சாய் நீலு மோசஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி 100 ற்கு மேற்பட்ட கராத்தே மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். விழாவில் மாணவ மாணவியரின் கராத்தே, நெஞ்சக், சிலம்பம், அடிமுறை டொமோ நடைபெற்றது. இவ்விழாவில் பெரும் திரளான மாணவ மாணவியரின் பெற்றோர்கள் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் கேரள மாநிலத்தைச் சார்ந்த கராத்தே வீரர்களும் சென்சாய் பலரும் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்வை கலை ஆர்வலர் பா.ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கினார்.