பரமக்குடி, அக்டோபர் 1 –
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாநில உயர்கல்வி துறை வழிகாட்டுதலின்படி கல்லூரி கலை திருவிழா நடைபெற்றது. தமிழ்நாடு மாநில உயர்கல்வித் துறை, இந்த கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் நிறுவனங்கள் உட்பட 252 அரசு கல்லூரிகளில் ‘கல்லூரி கலை விழா’வை அறிமுகப்படுத்தியுள்ளது. 252 கல்லூரிகளுக்கு ரூ.5.04 கோடியை ஒதுக்கியுள்ளது என்றும், இந்த நிகழ்வை நடத்த ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.2 லட்சம் கல்லூரி கலை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கல்லூரி, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறும் என்றும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு உயர்கல்வித் துறையால் விருது வழங்கப்படும்.
கலை, இலக்கியம், இசை, நிகழ்த்து கலைகள், பேச்சு மற்றும் விவாதம், தனிநபர் வெளிப்பாடு, சுற்றுச்சூழல் கலைகள் மற்றும் புதுமை ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் இந்த விழா பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கியது. கலைக்கல்லூரி திருவிழாவினை முதல்வர் ராஜா தொடங்கி வைத்தார். கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அறிவழகன் கலைத் திருவிழா குறித்து விளக்க உரையாற்றினார். கல்லூரியில் உள்ள அனைத்து துறை தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போட்டியினை அட்டவணை இடப்பட்ட தேதிகளில் நடத்தி வருகின்றனர். நேற்று, வணிகவியல் துறை சார்பாக விவாத மேடை, ஸ்டாண்ட் அப் காமெடி, ரோல் பிளே போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய தனி திறமைகளையும், குழுவாக தங்களின் திறமைகளையும் வெளிப்படுத்தினர். பரமக்குடி மகளிர் கலை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அண்ணாதுரை செல்வம் மாரிமுத்து, முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஜனாத், அங்காள ஈஸ்வரி, சேதுபதி கல்லூரி பேராசிரியர் அம்பேத்கார் உள்ளிட்ட நடுவர்களாக செயல்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இறுதியில் வணிகவியல் துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.



