தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் 18 துணை ஆட்சியருக்கு தகுதிக்காண் பருவப்பயிற்சி முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு தேர்வாணைத் தின் மூலம் 2021-22 ஆம் ஆண்டு தகுதி பெற்று குடிமைப் பணிக்காக நேரடியாக நியமிக்கப்பட்ட துணை ஆட்சியர்கள் 18 பேர் தகுதிகாண் பருவப் பயிற்சிக்காக தமிழ் பல்கலைக்கழகத்துக்கு வந்தனர்.
இவர்களுக்கு நிர்வாகக்கலைச் சொற்கள், சோழர் காலநீர் மேலாண்மை, சோழர் காலக்கட்டடக் கலை, வட்டார வழக்குச் சொற்கள், தமிழ்நாட்டின் நீர் வளங்கள், தமிழ் மொழி, மொழியியல், தமிழர் பண்பாடு ஆகிய பொருண்மை களில் பயிற்சி வழங்கப்பட்டது.
தொடக்க விழா நிகழ்வில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்து பேசினார் பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார்
தமிழ் பல்கலைக்கழக ஆய்வறிஞர் கால்டுவெல் ஆய்விருக்கையின் ஆய்வுத்தகை ஞர் நடராசப் பிள்ளை, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி.மாறன், தமிழ்ப் பல்கலைகழகப் பேராசிரியர் கவிதா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
மேலும் நூலகம், ஓலை சுவடிக் காப்பகம், தொல்லியல் அருங்காட் சியகம் ,ஆகியவற்றை துணை ஆட்சியர்கள் பார்வையிட்டு பயிற்சி பெற்றனர். முன்னதாக தமிழ்நாடு குடிமை பணிப் பயிற்சி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக த்தில் 18 துணை ஆட்சியருக்கு பயிற்சி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics