மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, திருஇந்தளுரில் பழமை வாய்ந்ததும் புகழ்பெற்றதுமான ஶ்ரீ மேல முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 81-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் கடந்த 4-ம் தேதி அக்னிநட்சத்திர அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காவிரிக்கரையில் இருந்து சக்தி கரகம் மற்றும் அலகு காவடிகள், 16-அடி நீளஅலகை வாயில் குத்திய பக்தர்கள் மேலதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, வீதியுலாவாக ஆலயத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கிய பின் பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான தரிசனம் செய்தனர்.



