பூதபாண்டி மே 26
பூதப்பாண்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை மற்றும் சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் அருமநல்லூர், சிறமடம், ஞாலம், கொக்கல் விளாகம், அழகியபாண்டியபுரம், திடல், ஈசாந்திமங்கலம், தௌ;ளாந்தி போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மூட்டோடு சாய்ந்தது. இத்தகவல் அறிந்தத தளவாய்சுந்தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். குறிப்பாக ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட கொக்கல் விளாகம் பகுதியில் சுமார் 2 ½ ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரத்து 500 வாழை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்வையிட்டார். அப்போது தோட்டக்கலை உதவி இயக்குநர் சந்திரலேகா, வருவாய் ஆய்வாளர் பீர்முகமது ராபி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து திடல் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பினையும் நேரடியாக சென்று பார்வையிடு விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தளவாய்சுந்தரம் அரசை வலியுறுத்தினார்.
உடன் ஞாலம் ஊராட்சி பொறுப்பாளர் குமாரசுவாமி, கண்டன்குழி முத்தையா மற்றும் விவசாயிகள் தங்கப்பன், சிதம்பரம்பிள்ளை, இராமயாபிள்ளை, ஆசிர்வாதம் உட்பட பலர் உடனிருந்தனர்.