காஞ்சிபுரம் மே 26
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெருமந்தூர் ஒன்றியம் , பேரீஞ்சம் பாக்கம் ஊராட்சி சார்பில் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அறிவுறுத்தலின்படி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேரிஞ்சம்பாக்கம் குமார் முன்னிலையில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பேரீஞ்சை பாண்டி ஏற்பாட்டில் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது.
உடன் ஒன்றிய பாசறை செயலாளர் வல்லக்கோட்டை தியாகராஜன், ஒன்றிய பொருளாளர் திருமால்,
கிளை
செயலாளர் ரங்கநாதன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஜோசப் ,ஸ்ரீதர் ,வினோத், பிரவீன், யுவராஜ், மதன் ,பிரபு ,பிரதீப் ,
சரத் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



