காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ்பெற்ற தெய்வ சேக்கிழார் திருக்கோயில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வச் சேக்கிழார் துவக்க விழா நடைபெற்றது.
தெய்வத்திருமுறை ஓதுதல், சொற்பொழிவு பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் குன்றத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாண்புமிகு குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினையும்,
நகைச்சுவை சொற்பொழிவாளர் புலவர் ராமலிங்கம் தலைமையில் இறையருள் பெற ஏற்ற நெறிபக்தி நெறியா? தொண்டு நெறியா எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை , காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, தெய்வச் சேக்கிழார் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் நித்தியா ராமன், நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், திருநீர்மலை ஜெயகுமார்,அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



