தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரி யில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது
பொறியியல் கல்லூரியில் ரூபாய் 182 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு ள்ள ஆய்வகம் ,பணிமனை மற்றும் புதிய கட்டிடங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
இதைத்தொடர்ந்து பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் ச.முரசொலி,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் குத்து விளக்கேற்றினார். வளாகத் தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங் களை பார்வையிட்டனர்.
கல்லூரி முதல்வர் ஜெயபால், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் சச்சிதானந்தம், உதவிசெயற்பொறி யாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் இன்பரசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்



