மார்த்தாண்டம், மே – 17.
களியக்காவிளை அருகே உள்ள மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (35). கொத்தனார் இவரது மனைவி ஸ்ரீஜா (21) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குளப்புறம் பகுதியைச் சேர்ந்த எழில் (35) என்பவருக்கும் ஸ்ரீஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஷீஜாவின் கணவர் வேலைக்கு சென்றவுடன் இவர்கள் இருவரும் வீட்டில் சந்தித்து சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 14 – 10 – 2017 அன்று மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கியபடி சிவகுமார் பிணமாக கிடந்துள்ளார். சிவகுமாரின் சாவில் மரணம் இருப்பதாக அவரது தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஸ்ரீஜாவிடம் பல்வேறு கோணங்கள் விசாரணை நடத்தியதில் சிவகுமாரை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் சிவகுமார் கொலை செய்தது உறுதியானதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக ஸ்ரீஜா மற்றும் காதலன் எழில் ஆகியோரை 8 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.