அஞ்சுகிராமம் மே – 14
மாவட்ட கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அளித்த மனுவில் நாகர்கோவில் டூ அஞ்சகிராமம் தேசிய நெடுஞ்சாலையில் அஞ்சுகிராமம் ஜேம்ஸ்டவுனில் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இப்பகுதியிலிருந்து ரஜகிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு இவ்வழியாக தான் செல்லவேண்டும்.
இந்த வருடத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது எனவே போர்க்கால நடவடிக்கை எடுத்து விபத்துக்கள் ஏற்படாமலும், உயிர்பலிகள் ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரினார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் சக்திவேல், நேரில் சென்று துணை தலைவர் காந்திரா ஜ் தலைமையில் ஆய்வு செய்தார்
உடன் அஞ்சுகிராமம் பேரூர் திமுக துணை செயலாளர் சமூக சேவகர் சொர்ணப்பன், ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ரஜீஸ், ஆட்டோ பிரகலாதன், போக்குவரத்து துணை ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.