நாகர்கோவில், மே 25 –
ஆரல்வாய்மொழி அருகே உள்ள பில்லாவிலை பகுதியை சேர்ந்தவர் சிசில் (57). தொழிலாளியான இவருடைய மனைவி வசந்தா கடந்த 8ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிசில் மன வேதனையில் இருந்து வந்தார். யாரிடமும் சரிவர பேசாமல் தனிமையிலே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சிசில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்குவதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சிசிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மகன் யாக்கோபு என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


