தூத்துக்குடி மே. 12
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது – 2 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 1,200/-, ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மீகா தலைமையில் சார்பு ஆய்வாளர் லூர்து சேவியர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, மடத்தூர் துரைக்கனி நகரை சேர்ந்த வேல்சாமி மகன் ரவிக்குமார் (52) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ 100 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 1,200/-, ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.