சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி.ஆராய்ச்சி மையத்தின் ஆடிடோரியத்தில் உமன்ஸ் லீக் பவுண்டேசன் அமைப்பின் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தனியார் நிறுவனங்களின் சிறப்பாக செயல்படுத்தப்படும் சமூக மேம்பாட்டு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில்
CSR & HR 2025 விருது வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உமன்ஸ் லீக் பவுண்டேசன் நிறுவனத்தின் நிறுவனர் திவ்யா தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., காசர் கிராண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு தனியார் நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சி.எஸ்.ஆர்.நிதியை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான சிறந்த CSR & HR விருதினை வழங்கி பாராட்டினர்.
பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவனர் திவ்யா கூறும்போது, பல்வேறு நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். நிதியை சமூக பொறுப்புணர்வுடன் பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள் என பல்வேறு மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் சிறப்பாக செயல்பட்ட 400 நிறுவனங்கள் இந்த விருதிற்கு விண்ணப்பித்து இருந்தன. இதில் வெகு சிறப்பாக சமூக பங்களிப்பு ஆற்றிய 80 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்று சிறந்த அதிகாரிகளுக்கு CSR- HR விருதினை வழங்கி கவுரத்துள்ளோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் கார்த்திகேயன், மகேந்திரா நிறுவனத்தை சேர்ந்த பாரதி, மக்கள் கட்டளை நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சரவணன்
காசர் கிராண்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் பிந்து, காசர் கிராண்ட் PGT DIVISION சி.ஓ.ஓ.பிரகாஷ் குணசேகரன், அமெரிக்கன் பள்ளி நிறுவனர் மோகனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் ஏராளமானோர் கலந்துப்கொண்டனர்