மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நினைவு நாள் நினைவஞ்சலி நடைபெற்றது திமுக மூத்த நிர்வாகியும் மிசா சட்டத்தில் கைது பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு கைது திமுக முக்கிய பொறுப்புகளில் உயர் பதவிகளில் வகித்து தலைவர் கலைஞர் கருணாநிதி தற்போது முதல்வர் ஸ்டாலின் வரை நேரடி தொடர்பும் மதிப்பும் பெற்ற மறைந்த மிசா மதிவாணன் தொடர்ந்து 30 ஆண்டுகள் செம்பனார்கோவில் திமுக ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியவர் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் விழா செம்பனார்கோவிலில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் திமுக கட்சி நிர்வாகிகள் எம் எல் ஏ க்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் முன்னதாக அவரின் உருவப்படத்திற்கு அதை அணிவித்து மலர்கள் மரியாதை செலுத்தப்பட்டது மதிவாணன் ராஜலட்சுமி அறக்கட்டளை சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்க பணம் கம்பு கேழ்வரகு கோதுமை உள்ளிட்ட சத்து மாவு அடங்கிய சத்துணவு பெட்டகம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மேலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது மற்றும் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி முழு தொகையும் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நினைவு நாளில் மறைந்த மிசா மதிவாணன் அவரின் உருவப்படத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அறக்கட்டளை சார்பில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. தந்தைக்கு மகன் செய்த நினைவு நாள் விழா காண்போரை வியக்க செய்தது. இந்த விழாவை மிசா மதிவாணனின் மகன்கள் பி எம் அன்பழகன் மற்றும் பி எம் ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


