தென்காசி மாவட்டம்
9 மாவட்ட ஊராட்சிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகள் உறுதி செய்ய முதல்வருக்கு கோரிக்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார் 10 ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்
இந்த கூட்டத்தின் போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி தென்காசி ,நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வருகின்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரேபோல் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அந்த முடிவை தமிழக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் எனவும் 2,500 ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதவிக்காலத்தை குறைக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டியின் வேண்டுகோளை ஏற்று தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது அறவழியில் போராடுவது எனவும்
தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு துணைத்தலைவர் அன்பு ராணி, பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம்,தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் தலைவர் சத்யராஜ்,மாவட்ட கூட்டமைப்பு பொருளாளர் ராஜ்குமார் .பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ,
ஆலங்குளம் கூட்டமைப்பு தலைவர் நீதி ராஜன், மாவட்ட கூட்டமைப்பு ஆலோசகர் கீழக்கலங்கள் சந்திரசேகர், மேலநீலிதநல்லூர் முத்துப்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கூட்டமைப்பு தலைவர் சகாயம்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகுதுரை,கல்யாணசுந்தரம்,உசேன், பூமிநாத் , மாரியப்பன்,பாபநாசம் முத்துலட்சுமி ராமதுரை ,சாருகலா ரவி, முத்தமிழ் செல்வி ரஞ்சித்,பிரேமலதா ராமஜெயம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.