மானாமதுரை:மே:02
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் முன்பாக உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தொமுச சங்கத்தின் சார்பில் வருடாவருடம் உழைப்பாளர்கள் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் சிவகங்கை மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளரும் , நகர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவருமான ஜீவாக்கண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நகர்க்கழக திமுக செயலாளர் க. பொன்னுச்சாமி அவர்களின் தலைமையில் கழக
தொமு சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பி.பாண்டி , பொருளாளர் எம். எம்.கண்ணன் , அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நகர்க்கழக மூத்த முன்னோடி சிவாஜி, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



