சிவகங்கை: மே:01
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது செங்குளிப்பட்டியை சேர்ந்தவர். கா.வெள்ளைச்சாமி இவர் மாற்றுத் திறனாளி தனது ஆதரவாளர்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார் .
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காளையார்கோவில் தாலுகா , மாங்காட்டேந்தல் குரூப்பில் உள்ள உப்புளி உடைப்பு கண்மாயின் வரத்துக் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் அடையாளக் குறியீடும் அ – பதிவேடு குறிப்பு காலத்தில் ஊரணி என உள்ளதை மறைத்தும் , வழக்கு நிலுவையில் இருந்ததையும் மறைத்து முத்தூர் வாணியங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவரான எதிர்மனுதார் பத்திரப் பதிவு செய்தார்.
இது தொடர்பாக நான் காளையார்கோவில் முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன் , மாங்காட்டேந்தல் குரூப் வி.ஏ.ஓ. மூர்த்தி , துணைத் தாசில்தார் ஆனந்தபூபாலன் , ஏ1 எழுத்தர் சதீஷ் உள்பட தவறு செய்த அதிகாரிகள் மற்றும் தவறுக்கு உடந்தையாக இருந்த 11 நபர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தேன் .
ஆனால் தவறுக்கு காரணமான மற்றும் துணை போன 11 – நபர்களில் வருவாய்க் கோட்டாட்சியரின் வாகன ஓட்டுனர் அருள்நாதன் , தற்காலிக தட்டச்சர் பழனியப்பன் , இளையான்குடி தாலுகாவில் பணிபுரியும் டி. புதூரில் குடியிருக்கும் மூர்த்தி ஆகிய மூன்று நபர்களை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்தது வேதனையாக உள்ளது . இதற்கு முழுக் காரணம் தற்போதைய கோட்டாட்சியர் விஜயகுமாரின் உள்நோக்கமே ஆகும்.
எனது மனுவின் விசாரணையை தொடர்ந்து காலம் கடத்தி வந்ததால் நான் கடந்த 04.11 .2024 ல் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தேன் . இதன் பின்னர் 22 .01.2025 ல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் புஞ்சை நிலத்தின் குறிப்பு காலத்தை ஏற்கனவே இருந்த நிலையிலேயே ஊரணி என தமிழ் நில பதிவேட்டில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது . இதன்படி நீதிமன்றத்தில் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறி மனு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது .
ஆனால் இந்த விஷயத்தில் அ – பதிவேட்டில் கணினி திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்கோவில் முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்பட 8- அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இப்போது தப்பித்து சென்றுள்ளனர் . எனவே மாவட்ட ஆட்சியர் தங்களின் உத்தரவை மறுவிசாரணை செய்து முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதன் மூலம் நீர் நிலையையும் , நீதியையும் பாதுகாக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டிருந்தது .