ஈரோடு ஏப்ரல் 24 ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை பேரணி நடந்தது. தமிழக முதலமைச்சர் அறிவித்த பழைய பென்ஷன் திட்டம் மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது. அதேபோல ஈரோடு மாவட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே இருந்து கோரிக்கை பேரணி தொடங்கியது. இந்த பேரணி மீனாட்சி சுந்தரனார் வீதி வழியாக சென்று ஈரோடு தாலுகா அலுவலகத்தை அடைந்தது .இந்த பேரணிக்கு ஈரோடு மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் விஜய மனோகரன் சரவணன் மதியழகன் வீரா கார்த்திக் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு பேரணியை தொடங்கி வைத்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ராணி தங்கவேலு பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் இளங்கோவன் ரஞ்சித் குமார் சண்முகம் குமரேசன் மற்றும் ஆசிரியர் அரசு ஊழியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .பேரணி முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.



