மயிலாடு துறை மாவட்டம், மயிலாடு துறை கிட்டப்பா அங்காடி அருகில் இந்து புரட்சி முன்னனி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து புரட்சி முன்னி மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் பெண்களையும், கடவுள்களையும் கொச்சைபடுத்தி பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவை . தமிழக அரசு நடைமுறைபடுத்தி அவரை கைது செய்ய வேண்டும் என்றும் முழக்கமிட்டனர் மாவட்ட பொது செயலாளர் பகவதிகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்து புரட்சி முன்னனி நகர செயலாளர் செந்தூர் செந்தில்நாதன், சிவசேனா மாவட்ட செயலாளர் கவிதா, மாநில துணைத்தலைவர் சிவசேனா ஆனந்த், மாவட்ட செயற்குழு இந்து புரட்சி முன்னணி மணிகண்டன், உட்பட 50-க்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில்,கலந்து கொண்டனர். இதில் நகரத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.



