தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ள கவர்னகிரியில் சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்ககுடும்பனாரின் 255 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கவர்னகிரி மணிமண்டபத்தில் உள்ள அவரது முழுஉருவ வெண்கலச்சிலைக்கு இமானுவேல் ரமேஷ் தலைமையில் கோவில்பிள்ளை முன்னிலையில் மள்ளர்சேனை நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் சோலைபழனிவேல்ராசன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த
நிகழ்ச்சியின் போது தியாகி இமானுவேல்சேகரனாரின் பேரன் ரமேஷ் தேவேந்திரன் கோவில்பிள்ளை நெல்லை செல்லப்பா முருகன்மள்ளர் கோபால் ராஜசேகர் லிங்கசாமி பிரபு ஆகியோர் உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.



