தருமபுரியில் இந்திய அரசின் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் கீழ் வரும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 75- வது ஆண்டு விழாவையோட்டி பேரணியை மூத்த புள்ளியில் அதிகாரி மதிவாணன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து நகராட்சி பூங்கா வரை நடைபெற்றது வழியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. புள்ளியியல் அதிகாரி கூறியதாவது. 1950 அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கீழ் சமூக பொருளாதார ஆய்வுகள், குடும்ப நுகர்வு செலவின் கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை பற்றிய தொடர் ஆய்வு, நேர பயன்பாட்டு ஆய்வு, நகர்புற பகுதிகள் ஆய்வு, அமைப்பு சாரா நிறுவனங்கள் பற்றிய வருடாந்திர ஆய்வு, உற்பத்தி துறை வருடாந்திர ஆய்வு, பயிர் புள்ளிவிவர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் ஆய்வுகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் வெற்றியானது மக்களின் முறையான மற்றும் சரியான தகவல்களை பொறுத்தே சார்ந்துள்ளது என்று தெரிவித்தார். இந்தப் பேரணியில் மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலக பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.



