தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மனித அள்ளி ஊராட்சியில் ஈசல் பட்டி கிராமம் மற்றும் அருந்ததியர் காலனியில் மின்கம்பம் பழுதாகி உள்ளது. என பொதுமக்கள் முன்னாள் வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் அளித்தினர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் வார்டு உறுப்பினர் பார்வையிட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்கம்பங்களை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார் . கோரிக்கை ஏற்ற அரசு அதிகாரிகள் உடனடியாக மாற்றி தந்தனர். மேல் பூரிகள் கிராமத்தைச் சார்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் சந்திரகாந்த், புஷ்பராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



