தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சரியாக காலை 9.15 மணி அளவில் மிகவும் சீரும் சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தினை நேரில் கண்டு தரிசனம் செய்தனர்
தென்காசியில் அமைந்துள்ள உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3ந் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ் வர பூஜை, , 4ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல், உலகம்பாள் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி ராஜகோபுரங்கள். விமான கோபுரங்கள். மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது.
இதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். டிரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் கும்பாபிசேகத்தை காண பல இடங்களில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தென்காசி நகராட்சி சார்பில்
ஆங்காங்கே குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பக்குளம் பகுதியில் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics