தஞ்சாவூர் ஏப்.7.
தஞ்சாவூர் கீழராஜவீதி அரசர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்1 முதல் 5 வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணித பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை அளவிடும் நிகழ்வு 100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல். மற்றும் அடிப்படைத் திறன்கள் மேம்பாடு பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அய்யாக்கண்ணு, வட்டாரக் கல்வி அலுவலர் சீ. அம்பிகா, தஞ்சை மாவட்ட அரசு வழக்குரைஞர் சண்முக சுந்தரம், அரசர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசி ரியர் பழ,பிரகதீஷ், அபூர்வா அறக்கட்டளை நிறுவனர் சந்தன சாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெனட் சோபா, 24 மாமன்ற உறுப்பினர் சந்தான கிருஷ்ணன், அரசர் மேல்நிலைப் பள்ளி துணை தலைமையாசிரியர் பழனிவேல். அபாகஸ் பயிற்சியாளர் பாரதி மற்றும் வெங்கடேஷ்வரா தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இரமேஷ் மற்றும் இசக்கிமுத்து, பெற்றோர்கள் சார்பாக சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சிகளை அரசர் அரசு
உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics