தஞ்சாவூர். ஏப்.5.
தஞ்சாவூர் அன்னை வேளாங்க ண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர்ஜான் சக்கரியாஸ் விழாவை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் கரோலினாமேரி வரவேற்புரையாற்றி அறிக்கை வாசித்தார்.
விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சக்தி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடந்த கல்வி ஆண்டில் இளங்கலை முதுகலை ஆய்வியல் நிறைஞர் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 570 மாணவ மாணவிகளு க்கு பட்டங்களை வழங்கினார்.
.பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் கணினி பயன்பாட்டு துறை மாணவர் கிறிஸ்டோபர் 18வது இடத்தையும், காட்சி தொடர்பியல் துறை மாணவர் ஜான்சன் 20வது இடத்தையும் பெற்றதற்கு தங்கப் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விழாவில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி வழங்கினார். கல்லூரி நிர்வாகி ஆரோன் கல்லூரி கலைப்புல தலைவர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



