திண்டுக்கல்
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் அழகர் கோசாலை மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கோசலை கட்டிடத்தை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் லட்சுமிமாலா, மற்றும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி திறந்தனர். பின்னர் பசு மாடுகளுக்கு கோ பூஜை நடைபெற்றது. பசுக்களுக்கு வாழைப்பழம்,புல், கோதுமை தவிடு, தண்ணீர் வழங்கப்பட்டு பக்தர்களால் பூஜிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசுதேவன், சுசீலா ராஜு, திமுக மாநகர பொருளாளர் மீடியா சரவணன், கோவில் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, ரமேஷ், மணியம் அரவிந்தன், அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர்கள் சண்முகவேல், மலைச்சாமி, தாடிக்கொம்பு பேரூராட்சி துணை தலைவர் நாகப்பன் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics